தைப் பொங்கல் திருவிழா
By
|
தைப் பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப் பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால், தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.
பொங்கல் திருவிழா உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.அந்த அறுவடையில்; கிடைத்த நெல்லின் புத்தரிசியை இனிய பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே இதுவாகும்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலரும் கருதுவர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடிவருகின்றனர்.
தமிழர்களுக்கு இரண்டு விழாக்கள் மட்டுமே உண்டு. அவை பொங்கல் விழாவும், ஆடிப்பிறப்பு விழாவுமாகும்.
உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா இதுவாகும்.
Related News & Events
10 வது ஆண்டு விழா (2008-2018)
இணைந்து வளர்ப்போம்! உயர்ந்து நிற்போம்! புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தாய்மொழி மீதான பற்றால் தம் சந்ததியினருக்கு தாய் மொழியை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் புகட்டியே…
By Arivakam Canada |
தைப் பொங்கல் திருவிழா
தைப் பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப் பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால், தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் திருவிழா…
By Arivakam Canada |
சொல்வதெழுதுதற் போட்டி அனுமதி அட்டை
போட்டி மண்டப விபரம், போட்டிக்கான நேரம் ஆகியவை பெப்ரவரி 05, 2015 இற்கு முன் மேற் தரப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் போட்டியாளர்களுக்கு ஆசிரியர் ஊடாக அல்லது நேரடியாக…
By Arivakam Canada |